தில்வாரா படித்துறை ஜபல்பூர் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. மஹாத்மா காந்தியின் இறப்புக்குப் பின் அவரது அஸ்தி, நர்மதா நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள தில்வாரா படித்துறையில் தான் கரைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை நினைவு கூரும் வகையில் காந்தி சமராக் ஒன்றும் இங்கு எழுப்பப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தின் போது மஹாத்மா காந்தி ஜபல்பூரில் மூன்று முறை தங்கியுள்ளார்.
அப்போதெல்லாம், அவர் இப்படித்துறைக்கு ஆன்மீக மார்க்கமாக வருகை தந்துள்ளார். இப்படித்துறை கங்கை நதிக்கு ஈடான புனிதத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், இங்கு வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து புனித நீராடிச் செல்கின்றனர்.
தில்வாரா படித்துறையில் வைத்து லோக்மான்ய திலக் அவர்கள் 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மாபெரும் பொது ஊர்வலத்தில் சொற்பொழிவாற்றியுள்ளார்; அப்போதிலிருந்து இந்த மைதானம், திலக் பூமி என்றே வழங்கப்பட்டு வருகிறது. இவை தவிர, அரசியல்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்களின் வருகை இதன் புகழுக்கு மேலும் அணி சேர்த்துள்ளது.