பூரியா என்ற சிறிய நகரம் ஜகத்ரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மாநகராட்சி செயற்குழுவாக விளங்கும் இது மேற்கு யமுனை கால்வாய் கரையில் அமைந்துள்ளது.
பீர்பால் த்வார் என்ற புகழ் பெற்ற கட்டமைப்பு இங்கு உள்ளதால், அக்பர் மன்னனின் அரசவை ஆலோசகராக விளங்கிய பீர்பால் ஆட்சி செயப்பட்ட இடம் இது என்று நம்பப்படுகிறது.
இந்திய சுதந்திரத்துக்கு முன், பூரியா நகரம் வெள்ளையர்கள் கட்டுப்பாட்டில் இந்திய அரசர் ரத்தன் அமோல் சிங்கால் ஆட்சி செய்யப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இந்த அரசரின் குடும்பம் இன்று கூட இவ்வூரில் தான் வசிக்கிறார்கள்.
படலேஷ்வர் மகாதேவ் ஷிவ் மந்திர், சனடன் தரம் ஹனுமான் மந்திர் போன்ற சமயஞ்சார்ந்த இடங்களும் இங்கு உள்ளன. மேலும் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான டேக் பகதூரை கவுரவப்படுத்தும் வகையில் ஒரு குருத்வாராவும் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications