மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் உள்ள வாடாவ் (பாடோவ்) கிராமத்தில் ஊம்ஹாம் ஏரி அமைந்துள்ளது.
மிகவும் பொருத்தமான அமைவிடத்தில் உள்ள ஊம்ஹாங் ஏரியை காணும் போது அது மிகவும் அழகாகவும், அடர்த்தியான பசுமையான காடுகளால் அனைத்து பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.
வரலாற்று குறிப்புகளின் படி, யூ சஜ்ஜார் நாங்லி மற்றும் அவரை பின்தொடர்ந்தவர்கள் இந்த ஏரி இருக்கும் இடத்திற்கு முன்பொருமுறை வந்துள்ளனர், அப்போது இந்த இடத்தில் ஒரு சிறிய ஊற்று மட்டுமே இருந்தது.
அதன் அழகால் மிகவும் கவரப்பட்ட இவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் இங்கே தங்கியிருந்து, ஜெயின்டியா அரசாங்கத்தின் பகுதிகளிலேயே மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்குமாறு இந்த ஏரியை உருவாக்கினார். சில மாதங்கள் இங்கே தங்கியிருந்து ஏரியை தோண்டும் வேலையை அவர்கள் செய்ததால், ஊம்ஹாங் ஏரி உருவானது.
ஊம்ஹாங் ஏரிக்கு வர விரும்புபவர்கள் ஷில்லாங்கில் இருந்து ஒரு சுற்றுலா வாகனத்தை அமர்த்திக் கொண்டு, மேகாலயாவின் மலைப்பகுதிகளில் உள்ள பசும்புல்வெளிகளை இரசித்தவாறே பயணம் செய்து வர வேண்டும். செப்டம்பர் முதல் மே மாதங்கள் இங்கே வர மிகவும் ஏற்ற பருவமாகும்.



Click it and Unblock the Notifications