1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காகா காட்டுயிர் சரணாலயம் 332 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. கட்ச் வளைகுடாவை ஒட்டிய கரைப்பகுதியில் இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது. பசுமையான தாவரச்செழிப்புடன் இந்த வனப்பகுதிக்கு ஏராளமான புலம்பெயர் பறவைகள் வருகை தருகின்றன.
கழைக்கடா, கரண்டிவாயன் மற்றும் நாரை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. பறவைகள் மட்டுமல்லாமல் நரி, ஓநாய், நீல எருது, காட்டுப்பூனை மற்றும் பலவகை வண்ணத்துப்பூச்சிகள், குளவிகள், சிலந்திகள், தேனீக்கள் போன்ற உயிரினங்களும் இந்த சரணாலயத்தில் மிகுதியாக வசிக்கின்றன.
இலையுதிர் காலம் மற்றும் வசந்த காலத்தின்போது இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது. பசுமையான வனப்பகுதியில் இயற்கையை ரசித்தபடி நடைபயணம் மேற்கொள்ளும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.