ஜாலாவார் நகரத்தின் சிறப்பான சுற்றுலா அம்சங்களில் இந்த புத்த குகைக்கோயில்கள் மற்றும் ஸ்தூபிகள் போன்றனவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கற்காலத்துக்கே நம்மை இழுக்கும் மாயசக்தி வீசும் இந்த குகைக்கோயில்கள் கொல்வி எனும் கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த குகைக்கோயில்கள் ஜாலாவார் நகரத்திலிருந்து 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. பிரம்மாண்டமான புத்தர் சிலை மற்றும் அலங்கார வடிப்புகளுடன் கூடிய ஸ்தூபி ஆகியவை இந்த ஸ்தலத்தில் காணப்படுகின்றன.
கொல்வி கிராமத்தினை சுற்றிலும் பல கிராமங்கள் அமைந்து, ஒரு மறைந்துபோன நாகரிகம் வாழ்ந்திருந்த இடத்திற்கான அடையாளங்களுடன் காட்சியளிக்கின்றன. குறிப்பாக பௌத்தம் இந்த பிரதேசத்தில் தழைத்தோங்கியிருந்ததை நம்மால் தெளிவாக இந்த காலச்சான்றுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.