ஜோத்பூரை உருவாக்கிய ஜோதா மன்னரால் ராஜ குடும்பத்தினர் வழிபடுவதற்காக கட்டப்பட்ட கோயில் இந்த சாமுண்ட மாதா கோயில் ஆகும். 1460ம் ஆண்டு இந்த சிலையை அவர் ஜோத்பூருக்கு கொண்டு வந்துள்ளார்.
மெஹ்ரான்கர் கோட்டையின் தெற்கு வாசலுக்கு அருகில் இந்த கோட்டை அமைந்துள்ளது. ஜோத்பூர் ராஜவம்சத்தினர் விருப்பத்துடன் பூஜித்த கோயிலாக இது திகழ்ந்துள்ளது. துசேரா பண்டிகையின்போது இந்த கோயிலை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.