ரோக்ஹி கிராமம் கல்பாவில் இருந்து 18 கிமீ தொலைவிலும் மற்றும் சிம்லாவில் இருந்து 210 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். அழகிய ஆப்பிள் தோட்டங்களுக்காவும், பழமையான முறையில் வாழ்க்கையை கழிக்கும் மக்களுக்காகவும் இந்த கிராமம் பிரபலமானதாக உள்ளது.
தற்கொலை முனையில் இருந்து 5 நிமிடத் தொலைவிலேயே இந்த கிராமம் அமைந்துள்ளது. மத நம்பிக்கைகளையுடைய சுற்றுலாப் பயணிகள் ரோக்ஹி கிராமத்திலிருக்கும் கோவிலுக்கு வந்து செல்வார்கள்.