பித்தார்கோன் என்ற இந்த கோவிலின் பெயரே அது இருக்கும் இடத்தையும் குறிக்கும். புராணங்களின் படி, இந்த இடம் புஷ்ப் பூர் அல்லது பூல்பூர் எனற் பழங்கால கிராமத்தின் உள்பகுதிகளில் உள்ள இடமாகும்.
இந்தியாவில குப்தர்களின் பொற்கால ஆட்சி நடந்து வந்த 6-வது நூற்றாண்டில், பித்தார்கோன் கோவில் கட்டப்பட்டது. எனவே, இந்த கோவிலுக்கு அதன் ஊரின் பெயரே வைக்கப்பட்டது.
உயரமான சிக்காரா வகை கூரையை உடைய கோவில்களில் மிகவும் பழமையான இந்து கோவிலாக பித்தார்கோன் கோவில் விளங்குகிறது. தரையிலிருந்து 68.25 அடி உயரமுடைய இந்த கட்டிடம் களிமண்ணாலும், 18 அங்குல நீளம், 9 அங்குல அகலம் மற்றும் 3 அங்குல உயரம் உடைய செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோவில் 36 அடி மற்றும் 47 அடி அளவுகளையுடைய ஒரு மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் சுவர்கள் 8 அடி அளவு மொத்தமானதாகும்.
இந்தியாவிலேயே முதன் முறையாக, கவிகை மாடம் (Vaulted Arch) போன்ற வளைவுகளை கொண்டுள்ளதாக இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலின் கர்ப்பக்கிரகம் 15 அடிக்கு, 15 அடி என்ற அளவுகளில் கட்டப்பட்டுள்ளது.
அது நர் என்பவர் நாராயணனிடம் சீதையைக் கடத்தியதன் பொருட்டு மனமிரங்கி வருந்தும், இந்து மத தத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ள