பிரச்சின் கோவில் என பெரும்பாலானவர்களால் வழங்கப்படும் ஆஷா புராணி கோவில் கத்துவா நகரின் மத்தியில் அமைந்துள்ளது. 1949ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஸ்ரீநகர் பகத் சஜ்ஜு ராம் அவர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில் துர்கை அம்மனை மூலக் கடவுளாக கொண்டது. கோவிலின் கோபுரம் 30 அடியிலும், அம்மனின் சிலை 10 அடியிலும் நிறுவப்பட்டிருக்கிறது.
புராணத்தின் படி காக்கும் கடவுள் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தால் துர்கை அம்மனின் சாம்பல் தூவப்பட்ட இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. அதன் பொருட்டே இக்கோவில் அஷா புராணி கோவில் என்றழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் அம்மனின் அருள் வேண்டு இங்கே வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications