இந்திய ஆன்மீக மரபில் தூய்மை மற்றும் அறத்தின் அடையாளமாக ராமர் கருதப்படுவதால், ராமர் தொடர்பான எந்த விஷயமும் அல்லது சின்னமும் புனிதமாக கருதப்பட்டு வணங்கப்படும் பாரம்பரியம் காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
அலாஹாபாத் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் இந்த ஷீ ராம் கோயில் பஜா எனும் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. சயால் தாலுக்காவில் உள்ள இந்த கோயில் இருபது வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கிறது.
ராமநவமி மற்றும் ஷீராமரோடு தொடர்புடைய திருநாள்களின்போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.