மக்நோவா தௌலிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலை தியோடாலாவில் தான் வைக்கப்பட்டுள்ளது. 'மான்' இனத்தவரின் படையெடுப்பின் போது மக்நோவா சிலை அழிந்து விடாமலிக்கும் பொருட்டாக மறைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த சிலை கேராஜ்காட்டி லுள்ள கவோரு பீலிலிருந்து கொண்டு வரப்பட்டது.
கவோரு பீலிலிருந்து கண்டுபிடித்து கொண்டு வரப்பட்டு தியோடாலாவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலை போர்-கலைக்கா தான் என்று முறையாக அழைக்கப்பட்டு வருகிறது.
தியோடாலா என்ற வார்த்தையில் 'தியோ' என்றால் கடவுள் என்றும், 'டோலா' என்றால் 'தூக்குதல்' என்றும் பொருளாகும். லக்ஷிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூரிலிருந்து 8 கிமீ தொலைவில் தியோடாலா அமைந்துள்ளது.
நாராயண்பூர் காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு விரிவான கட்டிடக்கலையோ அல்லது சாதாரண எதிர்பார்ப்பிற்கு மாறான அம்சங்களோ கிடையாது. எனினும், இது அமைதியும், அழகும் குழுமியிருக்கும் இடமாகும்.
மக்நோவா தௌலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அந்த சுற்றுலாப் பயணத்தை முழுமையாக்கும் பொருட்டாக தியோடாலாவிற்கும் வருவது வழக்கம். மக்நோவா தௌலும் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ளது.