ஓய்விற்கும், சுற்றுலாவிற்கும் சிறந்த இடமாக இந்த நீர்வீழ்ச்சி கருதப்படுகிறது. கியோஞ்சரில் இருந்து 100கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் இயற்கையான நீர் சேகரிப்பு மையமாகவும் விளங்குகிறது.
பீமன் இங்கு குளித்ததாக நம்பப்படுவதால் இந்த இடம் பீம குண்டம் என்றும் வழங்கப்படுகிறது. கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் நகரங்களின் எல்லையில் உள்ள இந்த இடத்தில் இளைப்பாறுவதற்காக குளிர்காலங்களில் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.