இயற்கை எழிலும், மலைகளும், நதிகளும் சூழ்ந்த கம்பீரமாக நகரமாக ரூர்கேலா திகழ்கிறது. சுந்தர்கார்ஹ் என்ற பழங்குடி மையத்தில் ஒரு பகுதியாக திகழும் இந்நகர் புவனேஷ்வரில் இருந்து 325கிமீ தொலைவில் உள்ளது.
ஒடிசாவின் வியாபாரத் தலைநகர் என அறியப்படும் ரூர்கேலா இயற்கை எழில் சூழ்ந்த தொழிற்சாலை நகரமாக திகழ்வது வியப்பு. இயற்கை மற்றும் செயற்கையான சுற்றுலா தளங்களுக்காக பெயர்போன இங்குதான் ஆசியாவிலேயே முதன்முதலில் 1984ல் கண்காணிப்பு காமிரா செயல்பாட்டிற்கு வந்தது.
ரூர்கேலா அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
மலைகள், நதிகள், ஏரிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. ஹனுமான் வாடிகா என்னும் பிரம்மாண்ட சிலை ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
வேதவியாஸ், மந்திரா அணை, பிதமஹால் அணை ஆகிய இடங்களில் இயற்கை சார்ந்த அழகினை ரசிக்க முடியும். மேலும் கோகார் கோவில், மா வைஷ்ணோ கோவில், லக்சுமி நாராயண் கோவில், ஜகன்நாத் கோவில், அஹிராபந்த் கோவில், ராணி சதி கோவில் போன்ற கோவில்களும் இங்கு ஏராளம் உண்டு. கண்டஹார் நீர்வீழ்ச்சி, பிஜூ பட்நாயக் ஹாக்கி மைதானம் என பல இடங்களும் உண்டு.