சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இயற்கை சூழ்ந்த இடமாக வேதவியாஸ் திகழ்கிறது. கோயல், ஷங்கா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கு இடத்தில் அமைந்திருப்பதால் இவ்விடம் திரிதர சங்கம் என்றும் வழங்கப்படுகிறது.
வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த இடம் நகரில் இருந்து 9கிமீ தொலைவில் உள்ளது. வியாஸ மகரிஷி இந்த இடத்தில் வைத்துதான் மகாபாரதக் கதையை எழுதியதாக கூறுகிறார்கள். இங்கிருக்கும் வியாசர் குகைகளை படகு சவாரி செய்து கண்டு மகிழலாம்.