கொடலா பகுதியில் உள்ள ஆற்றங்கரைப் படுகைப் பகுதியில் இந்த புகழ்பெற்ற கோயிலான தியோபந்த் கோயில் மூன்று புறமும் நீரால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. கம்பிரமான சஹயாத்திரி மலையடிவாரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. மேலும், கொடலாவிலுள்ள கேர்வாடி மலைப்பகுதி காட்டு முகாமிற்கு அருகாமையிலும் இந்த கோயில் உள்ளது.
கணேஷக் கடவுளுக்காக இந்த தியோபந்த் கோயில் கட்டப்பட்டுள்ளது. கணேஷ உற்சவம் மற்றும் வினாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய பண்டிகைக் காலங்களில் இங்கு பக்தர்கள் அதிக அளவில் கூட்டமாக வருகை தருகின்றனர்.
பின்னணியில் கம்பீரமான மலைகளையும், அமைதியான ஆற்றையும் கொண்டுள்ள இந்த கோயில் ஸ்தலம் மனதிற்கு சாந்தத்தை கொடுக்கும் சூழல் இயல்புடன் தியானத்திற்கு ஏற்ற இடமாக விளங்குகின்றது.
மேலும், இந்த கோயில் வளாகத்தினை சுற்றியுள்ள பகுதி சிற்றுலாவுக்கு சிறந்த இடமாகவும் அறியப்படுகிறது. இங்கு தியோபந்த் நீர்வீழ்ச்சியையும் பார்த்து ரசிக்கலாம்.