பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது.
இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு அந்நேரம் செல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.