இந்த கஸ்பாக் மைதானம் பாரம்பரிய குஸ்தி சண்டை நடைபெறும் திறந்தவெளி அரங்கமாகும். சுமார் 30000 பேர் உட்கார்ந்து பார்க்க கூடிய அளவுக்கு அமைந்துள்ள இந்த மைதானம் இந்தியாவிலேயே ஒன்றே ஒன்று எனும் பெருமையை உடையது.சத்ரபதி ஷாகு மஹாராஜாவால் கட்டப்பட்ட இந்த திறந்தவெளி மைதான அரங்கு இந்திய பாரம்பரிய தற்காப்புக் கலை வடிவமான குஸ்தி என்றழைக்கப்படும் மற்போர் போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
அப்போட்டிகளின்போது மல்யுத்த வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஹலாகி என்றழைக்கப்படும் வாத்திய இசை வாசிக்கப் படுவதும் வழக்கத்தில் இருந்தது என்பது ஒரு சுவாரசியமான கூடுதல் தகவல் ஆகும்.அக்டோபர் மாதத்தின் போது நீங்கள் கோலாப்பூருக்கு விஜயம் செய்யும் பட்சத்தில் இன்றும் இந்த மைதானத்தில் நடத்தப்படும் குஸ்திப் போட்டிகளை கண்டு அனுபவித்து. மகிழலாம்.



Click it and Unblock the Notifications