ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 1794 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு கட்டமைப்பாகும். கோத்தகிரியில் இருந்து இருபது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இது, இம்மலைப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக அறியப்படுகிறது.
நீலகிரி வாழ் மக்களுக்கு ரங்கசாமி சிகரம் ஒரு முக்கிய இடமாகும். இம்மாவட்டத்தில் உள்ள மக்களின் உள்ளூர் தெய்வமாக கருதப்படுகிறது. இந்த சிகரத்திலுள்ள கோயில் அவர்கள் புனித பயணம் செல்லும் ஒரு முக்கிய இடமாகும்.
புராணங்களின் படி இங்குள்ள தெய்வமான ரங்கசாமி பெருமான் தன் மனைவியுடன் சண்டையிட்டு, தான் தங்கியிருந்த கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள காரமடை என்ற ஊரிலிருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளார்.இந்த சிகரத்தின் அடிவாரத்திலுள்ள இரு காலடித்தடங்கள் இந்தப் புராணக்கதைக்கு சான்றாக கூறப் படுகிறது.
இந்த சிகரத்தின் தென்மேற்குப் பகுதியில்நானூறு அடி உயரமுள்ள ரங்கசாமி தூண் அமைந்துள்ளது. இந்தக் கட்டமைப்பின் சிறப்பு அளவிட முடியாதது.



Click it and Unblock the Notifications