கும்டாவிற்கு செல்லும் வழியில் பயணிகள் நேரம் இருந்தால் இந்த வெங்கட்ராமன் கோயிலுக்கு விஜயம் செய்யலாம். வெங்கடராமர் மற்றும் கோபாலகிருஷ்ணர் போன்ற கடவுள்கள் இங்கு பிரதானமாக காட்சியளிக்கின்றனர். தவிர சத்யபாமா, லட்சுமி மற்றும் முக்ய பிரான் தேவ் போன்ற தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் தேர்த்திருவிழா மற்றும் மே மாதத்தில் நடத்தப்படும் அஸ்திவார தினம் போன்றவை இந்த கோயிலின் முக்கியமான விசேஷ திருவிழாக்களாகும்.
இவை தவிர இதர மதப்பண்டிகைகளான கார்த்திகோத்சவம், சம்பஷஷ்டி உத்சவம், சப்தபிரகார் பஜன், ரதோத்சவம் மற்றும் உகாதி போன்றவையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முக்கோடி துவாதசி, அக்ஷய திரிதியை, ஆனந்த விருத்தம் மற்றும் ராம நவமி போன்ற இதர பண்டிகைகளும் இந்த கோயிலில் விசேஷமாக நடத்தப்படுகின்றன.இந்த கோயிலின் நிர்வாகம் ஷீ சம்ஸ்தான் கோகர்ண் பர்தக்ளி ஜீவோத்தம் மடம் எனும் அமைப்பின் பொறுப்பில் உள்ளது. இந்தக்கோயில் இப்பகுதியில் உள்ள கௌடா சரஸ்வாத் பிராமண சமூகத்தார்க்கு முக்கியமான ஆன்மீகஸ்தலம் மற்றும் சடங்கு மையமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications