இந்தியாவின் முக்கிய சமயத்தவர்களான இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய அனைவருக்குமான மத வழிபாட்டுத்தலமாக குஷிநகர் உள்ளது. புத்தரும், மகாவீரரும் அடிக்கடி வந்து, தங்களுடைய போதனைகளை வழங்கிய புனித தீர்த்தமாக இவ்விடம் உள்ளது. மேலும், பகவான் மகாவீரர் நிர்வாணமடைந்து புனிதப்படுத்தப்பட்ட இடமாவும் இது விளங்குகிறது.
மேலும், வரலாற்று மற்றும் மதச்சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்கள், கோவில்கள், ஸ்தூபிகள் மற்றும் பூங்காக்களை கொண்டிருக்கும் இடமாக இது உள்ளது. பெரும்பாலான இந்த இடங்களில், இந்திய தொல்பொருள் நிறுவனத்தின் குழுக்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது, அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட பொருட்களின் மிச்சங்கள் இன்றளவும் இங்கு காணப்படுகின்றன.
தேவ்ராஹா அஸ்தான் அல்லது தேவ்ராஹா கோவில், குசிநகரத்தில் உள்ள பாட்ராவ்னா கன்டோன்மெண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. மேலும், இந்த இடத்தில் ஒரு மலையின் மீது கட்டப்பட்டுள்ள கோவில் ஒன்றும் உள்ளது.
இந்த வழிபாட்டுத்தலத்தில் மகாவிஷ்ணு, மகாவீர தீர்த்தங்கரர் மற்றும் நெமிநாத் தீர்த்தங்கரர் ஆகியவர்களுக்கான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழிபாட்டுத்தலம் திருமூர்த்திகள் சிலை அல்லது திரியம்விராட் என்ற பெயரில் பிரபலமாக உள்ளது. நாட்டுப்புறக் கதைகளின் படி, இந்த கோவிலில் ஒரு பெரிய புத்தரின் சிலையும் இருந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications