காசியா – தாம்குஹி சாலையில் உள்ள ஒரு நதியின் கரையில், 8வது கிலோமீட்டரில் உள்ள குருகுல்லா அஸ்தான் கோவிலில், முதல் மற்றும் உண்மையான சக்தியான ஆதிசக்தியா கருதப்படும் குருகுல்லா தேவிக்கான கோவில் உள்ளது. இந்த புனிதமான கோவில் நாகார்ஜுனரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அழகிய மற்றும் அமைதியான வனப்பகுதிகளில் உள்ள இடம், தியானம் செய்பவர்கள் மற்றும் அமைதியை விரும்புபவர்கள் மற்றும் தினசரி வாழ்க்கைப் பிரச்னைகளிலிருந்து விலகி ஓய்வெடுக்க விரும்புவர்கள் என அனைவருக்கும் விருப்பமான இடமாக உள்ளது.
இந்த பகுதியில் வசித்து வரும் மக்களிடம் தியானம் செய்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக குருகுல்லா அஸ்தான் விளங்குகிறது.