உலகமெங்கும் உள்ள பௌத்தர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித வழிபாட்டுத்தலமாக இருக்கும் மகாபரிநிர்வாணா கோவில், உத்திரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ளது.
புத்தர் தனது 80-வது வயதில் உலகத்தின் பூவுடலை விட்டு வெளியேறி, முழுமையான அமைதியைப் பெற்ற இந்த இடத்தில், அவருடைய 6.10 மீ நீளமுள்ள சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
சூனாரின் கற்குவாரிகளிலிருந்து தருவிக்கப்பட்ட சிவப்பு மணல் கற்களில், ஒரே கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டதாக இந்த சிலை உள்ளது. இந்த சிலையில் புத்தர் வலது புறமாக படுத்தபடியும், அவருடைய முகம் மேற்கு திசையைப் பார்த்த படியுமாகவே உள்ளது. இதுதான் மகாபரிநிர்வாணம் அடைவதற்கு ஏற்ற நிலையாக கருதப்படுகிறது.
செங்கற்களாலான ஒரு பெரிய மேடையில் அதன் முனைகள் தூண்களால் தாங்கப்படும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேடையை, கி.மு.5-ம் நூற்றாண்டில் புத்தரின் சீடர்களில் ஒருவரான ஹரிபாலர் என்பவர் கட்டியதாக கற்பதிவுகளில் எழுதப் பட்டுள்ளன. இந்த கோவில் மற்றும் விஹாரம் இரண்டுமே, தன்னுடைய மதிப்பு வாய்ந்த ஆசிரியருக்கு, ஒரு சீடனின் மேன்மை தாங்கிய பரிசாகவே தோற்றமளிக்கின்றன.
இந்த கோவில் உலகம் முழுவதிலிமிருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications