1992-93-ம் ஆண்டுகளில் இந்திய-ஜப்பானிய திட்டமாக 68 இலட்ச ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு உருவாக்கப்பட்ட தியான பூங்கா, ஜப்பானிய தியான பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவின் பெயருக்கேற்ற படியே, அது இங்கு வரும் மக்கள் தியானத்தின் மூலம் ஓய்ந்திருக்கவும் மற்றும் மகிழ்ந்திருக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட நீரூற்றுகள் மற்றும் பசும்புற்கள் நடப்பட்டிருக்கும் உயர்த்தப்பட்ட மேடைகள் ஆகியவற்றைக் கொண்ட அடர்த்தியான மற்றும் இயற்கையான சூழலில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் சால் மரங்கள் மற்றும் பல்வேறு வகைகளினாலான பசுமையான மற்றும் மலர்ச் செடிகள் ஆகியவைகள் திரும்பிய பக்கமெல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.
புத்தர் சாய்ந்த நிலையின் படுத்துக் கொண்டு நிர்வாணா என்ற உயர்நிலையை அடைந்த நிர்வாணா கோவிலுக்கு அருகில் தான் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா அமைந்திருக்கும் தெய்வீகமான சூழல் மற்றும் நிர்வாணா கோவிலின் அண்மை ஆகியவற்றின் காரணமாக அது தியானம் செய்யவும் மற்றும் அமைதியாக சிந்திக்கவும் ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த நகரத்திலேயே மிகவும் அழகான மற்றும் அமைதியான இடமாகவும் மற்றும் பெருந்திரளான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகவும் இந்த பூங்கா விளங்குகிறது.



Click it and Unblock the Notifications