பீகார் சுற்றுலாவின் வரைபடத்தில் லக்கிசராய் ஒரு முக்கிய ஈர்ப்பாக விளங்குகிறது. 1994-ஆம் ஆண்டு வரை முன்கர் மாவட்டத்தின் கீழிருந்த லக்கிசராய், அதற்கு பின் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால் இந்திய வரைபடத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை பெற்றுள்ளது. லக்கிசராய்க்கு தெற்கே ஷேய்க்புராவும், கிழக்கே முன்கரும், மேற்கே பேகுசராயும் வடக்கே பாட்னாவும் உள்ளன.
நன்றாக வளர்ந்துள்ள இந்த நகரம் இன்னமும் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் இருக்கிறது. ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய பின்புலத்தை கொண்ட நகரமாகும் இது. லக்கிசராய் சுற்றுலா அனைத்து வசதிகளையும் அளிக்கும் ஒரு முழுமையான இணைப்பாக விளங்குகிறது.
அதனால் இங்கு அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் தகவல் தொடர்பு வசதிகளும் உள்ளன. வளமையான வரலாற்றை கொண்டுள்ளதால் இங்கே அறிந்து கொள்ள கூடிய விஷயம் பல இருக்கின்றன. அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இங்கு வருவதுண்டு.
கங்கை, கியுல் மற்றும் ஹரோகர் ஆகிய மூன்று நதிகள் தான் லக்கிசராயிலுள்ள முக்கிய நதிகளாகும். இதுவே சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகவும் அமைந்து விட்டது. கபையா, பரஹியா, ஷ்ரிங்கி ரிஷி, அபிநாத், நோன்கர், பகவதி மற்றும் அபிநாத் அஸ்தன் தான் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களாகும்.
இங்கு சில இடங்களில் தீவிர ஆராய்ச்சி மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வரலாற்றை அறிந்து கொள்வதில் இவர்களின் பங்களிப்பு பெரிதளவில் உள்ளது.
அபிநாத் அஸ்தன், தரியாபூர் மற்றும் அஷோக் தம்மிற்கு அருகில் இருக்கும் அம்ரசனி இங்கிருக்கும் மற்றொரு சுற்றுலாத் தலமாகும். இங்குள்ள சிவ லிங்கத்துக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது.
லக்கிசராயை அடைவது எப்படி?
லக்கிசராயை நகரத்திற்குள் வருவதற்கு இரயில் அல்லது சாலை வழியாக வருவதே சிறந்ததாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications