புனித ஜான் சர்ச், லாண்ஸ்டவுனின் `மால்' சாலையில் அமைந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க மதச்சின்னமாகும். இது பிரிட்ஷ் கால கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. முந்தைய கலத்தில், ஒரு காட்டு பங்களாவாக இருந்த இந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபை, 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
லாண்ஸ்டவுனில் உள்ள ஓரே தேவாலயம் இதுவாகும். தேவாலயத்தின் கட்டுமானம் 1936-ஆம் ஆண்டு ஆக்ரா மறை மாவட்டத்தின் வழிகாட்டுதலின் படி ஆரம்பிக்கப்பட்டு, 1937-ல் நிறைவு பெற்றது.
1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், ஆக்ரா மறை மாவட்டத்தினரால், பூசாரிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தேவாலயத்தை நிர்வகிக்க முடியவில்லை. பின்னர், தேவாலயத்தின் நிர்வாகம் 1951 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
1977 ஆம் ஆண்டில், ரெவ் `கிரேஷன் முன்டாடன்' லாண்ஸ்டவுனில் ஒரு புதிய மிஷினரியை தொடங்க உறுதி பூண்டார். அவர் ஃபாதர் `பிராங்' வசம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்.
அவர் தேவாலயத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தி இந்தியாவின் மிக உயர்ந்த அதிகார மையங்களை அணுகினார். அவரின் விட முயற்சியின் பயனாக 1980 ல், அப்போதைய பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி, தேவாலயத்தை தொடங்க அனுமதி அளித்து அதன் பொறுப்பை முறையான உரிமையாளர்கள் வசம் ஒப்படைத்தார்.
டாக்டர் `பாவ்லினஸ் ஜீராகாத் CMI', இத்தேவாலயத்தை, 1983 ம் ஆண்டு , ஏப்ரல் மாதம் 26 இல் மீண்டும் திறந்தார். அதன் பின்னர், இங்கு தினமும் பிரார்த்தனை நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications