நவ்தத்தோலி, வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த, நர்மதா நதியின் இரு கரைகளிலும் அமைந்த ஒரு இடமாகும். இந்த இடத்தின் தனித்தன்மை யாதெனில், இது பாலியோலித்திக் காலத்திலிருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் நடைமுறையில் இருந்த பல்வேறு கலாச்சாரங்களின் உறைவிடமாக இருந்துள்ளது.
நவ்தத்தோலியின் சிதிலங்கள் 1950 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வாராய்ச்சியின் போது, வண்ணம் தீட்டப்பட்ட பானைகள் போன்ற பல காலத்துக்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் கல்லாலான நினைவுச் சின்னங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு காணப்பட்ட பழங்கால வீடுகளின் இடுபாடுகள் சுமார் 3 அடி சுற்றளவு கொண்ட செவ்வகமாகவோ அல்லது வட்டமாகவோ இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த வீடுகள் மூங்கில் சுவர்களையும், மண் கூரைகளையும் கொண்டிருந்திருக்கின்றன.
நவ்தத்தோலியின் மூன்றாவது கலாச்சார காலகட்டம் 1500 பிசிக்கும் 1200 பிசிக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மானுடவியல் பயிலும் மாணாக்கர்கள் இந்தியா முழுவதிலிருந்தும் வந்து இவ்விடத்தைப் பார்த்துச் செல்கின்றனர். மஹேஷ்வரில் தங்கி இருக்கும் போது, நவ்தத்தோலிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.