சிவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள தில்பனேஷ்வர் கோயில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அதன் கதவுகள் மற்றும் உப்பரிகைகள் கொண்ட கட்டுமானத்திற்காகவே புகழ் பெற்றுள்ளது.
இக்கோயிலில் குடி கொண்டுள்ள மூலவரின் சிலை வளர்ந்து கொண்டே வருவது இதன் சிறப்பம்சமாகும். இக்கோயில் வளாகத்தில் கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி விழாவைக் காண பெருந்திரளான மக்கள் இங்கு கூடுகின்றனர்.
தில்பனேஷ்வர் கோயிலில், மகர சங்கராந்தி, அன்னக்கூட் போன்ற வைபவங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மஹேஷ்வரில் உள்ள இதர கோயிலகளைப் போன்றே புனிதமான நர்மதா நதிக்கு அருகிலேயே அமையப்பெற்றுள்ள தில்பனேஷ்வர் கோயிலின் பிம்பம் நதி நீரில் தெளிவாக பிரதிபலிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இக்கோயில் கதவுகள் மற்றும் சுவர்களில் காணப்படும் அழகிய கட்டுமானத் திறனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அதிசயிக்கின்றனர். இங்கு காணப்படும் உப்பரிகைகள் இக்கோயிலின் தலைசிறந்த படைப்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றன. சிவபெருமானின் பக்தர்கள் இக்கோயிலுக்குச் செல்லாமல் மஹேஷ்வரிலிருந்து திரும்புவதில்லை.



Click it and Unblock the Notifications