கரிக்நானோ எனும் இந்த பிரசித்தமான சுற்றுலா அம்சம் சிம்லா மாவட்டத்தில் சிம்லா-நல்தேரா நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7700 அடி உயரத்தில் உள்ள இந்த அழகிய மாளிகை இத்தாலிய புகைப்படக்கலைஞரான செவாலியே ஃபெடரிகோ பெலிட்டி என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. கரிக்நானோ எனும் தனது சொந்த ஊரின் பெயரையே அவர் இம்மாளிகைக்கு சூட்டியுள்ளார்.
ஒரு சிகரத்தின் உச்சியில் உள்ள இந்த கரிக்நானோ மாளிகை சுற்றிலும் பல சிறிய ஓடைகளாலும், ஓக் மற்றும் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளாலும் சூழப்பட்டிருக்கிறது.
மேலும், இம்மாளிகை வளாகத்தில் பரந்த புல்வெளி, இரவு விளக்குகள் மற்றும் கல் இருக்கைகள் போன்றவை காணப்படுகின்றன. இவை காலனிய ஆட்சிக்காலத்தின் அம்சங்களை பிரதிபலிக்கின்றன.
உலகிலேயே மிக உயரமான ஒரு நீரேற்று இயந்திர அமைப்பையும் இப்பகுதியில் பயணிகள் காணலாம். 7657அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீரேற்று அமைப்பு சிம்லா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் நீர்த்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் ராப்பெல்லிங், ராக் கிளைம்பிங் மற்றும் ஃபிஷிங் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இந்த ஸ்தலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.



Click it and Unblock the Notifications