மசிங்குடி-ஊட்டி சாலையில் இருக்கும் மொய்யாறு நகரில் இருந்து உருவாகும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும் பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமைகின்றது.
இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருகின்றன, அவற்றை காண்பதற்கு இது ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது. மொய்யாறு பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் மொய்யாறு நதி இடுக்குவழி இருபது கிலோமீட்டர் ஆழம் உடையது.
மொய்யாறு நதியில் தோண்டப்பட்டு உள்ள ஒரு பெரிய குழியின் வழியாக மொய்யாறு நதிநீர் வழிந்தோடுவது, மொய்யாறு அருவி உருவாக காரணமாக இருக்கிறது. இந்த நதியின் ஓரத்தில் பல சுற்றுலா பயணிகள் பார்வையிடக்கூடிய பல சுற்றுலா தலங்கள் இருக்கின்றன.
முதுமலை தேசிய பூங்காவிற்கு உணவளிக்கும் முக்கிய நதியாக மொய்யாறு நதி திகழ்கின்றது. அமைதியான இயற்கை காட்சிகளை காண விரும்புவோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.