முங்கரின் வசீகரமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான முங்கர் கோட்டை கட்டப்பட்ட தேதி துல்லியமாக தெரியாவிட்டாலும், இது அடிமை ராஜ்ஜியத்தின் ஆட்சிக்காலத்தின் போது கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த கோட்டை இரு பிரபலமான மலைகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் ஒன்று...
அரக்கியாகிய தர்காவுடன் நேருக்கு நேர் மோதிய பின், ராமபிரான் தன் சகோதரராகிய லக்ஷ்மணருடன் கஸ்டஹர்னி படித்துறையில் வந்து ஓய்வெடுத்ததாக வால்மீகியின் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராமபிரான் சீதாபிராட்டியை மணமுடித்தபின் மிதிலையிலிருந்து அயோத்திக்கு...
வெந்நீர் ஊற்றாக விளங்கும் சீதா கந்த்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வருடம் முழுவதும் இருந்து வந்தாலும், மகம் பௌர்ணமியன்று செல்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
இங்கு உலவி வரும் நாட்டுப்புறக் கதைகளின் படி, சீதா தேவி தீக்குளித்து வெளியே வந்த போது,...
கஸ்டஹர்னி படித்துறைக்கு அருகாமையில் அமைந்துள்ள மன்பதார் நன்கு அறியப்பட்ட பாறைகளுள் ஒன்றாகும். இந்த பாறையின் மேல், கங்கையை கடக்கும் போது சீதா தேவி தன் இரு பாதங்களையும் ஊன்றிய போது ஏற்பட்ட சுவடுகளாக நம்பப்படும் இரு பாதசுவடுகளை காண முடிகிறது.
சுமார் 250...
காளி பஹாடி, காளி தேவியின் வழிபாட்டுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஒரு பிரபலமான மலையாகும். இம்மலையை காளிதேவியின் தெய்வீக சக்தியின் சின்னமாக புராணங்கள் கொண்டாடுகின்றன. இந்த இடம் ஒரு நல்ல சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது.
ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, பீஹார் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரான டாக்டர். ஸ்ரீ கிருஷ்ண சின்ஹா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தோட்டமாகும்.
கஸ்டஹர்னி படித்துறைக்கு நேர் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, கண்ணைக் கவரும் தோட்டமாக விளங்குகிறது. இங்கு...
பீஹாரின் யோகா பாடசாலை, சுவாமி சத்யானந்தா அவர்களால் 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டுள்ளது. இப்பாடசாலை அதன் யோகா பயிற்சிக்கு உலகெங்கிலும் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த பாடசாலை, யோகா கற்றுத் தருவதோடு மனித ஆளுமை மேம்பாட்டில் யோகாவின் முக்கியத்துவத்தையும்...
கராக்பூரின் இரு மலைமுகடுகளுக்கு இடையில் சீதா கந்த்திலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் அமைந்துள்ள ரிஷிகந்த் ஒரு வெந்நீர் ஊற்றாகும். இந்த இடத்தில் காணப்படும் நீர்த்தேக்கமானது இப்பகுதி மக்களின் நீராதாரமாகத் திகழ்கிறது.
இவ்விரு மலை முகடுகளுள் ஒன்றின்...
முங்கரின் மிக அழகான ஏரிகளுள் ஒன்றாகிய கராக்பூர் ஏரி, தர்பங்கா மஹாராஜாவினால் கட்டப்பட்ட ஒரு நீர்த்தேக்கத்தினால் மேலும் அழகு பெற்று ஜொலிக்கிறது.
முல்லா முஹம்மது சயீது சமாதி, ஔரங்கசீப்பின் அரசவையைச் சேர்ந்த பிரபலமான கவிஞராகிய முல்லா முஹம்மது சயீதின் சமாதியாகும்.
அனைவராலும் மிகவும் போற்றப்பட்டு ராஜ உபசாரங்களோடு வாழ்ந்த இவர் ‘அஷ்ரஃப்’ என்ற புனைப்பெயரில் எழுதி வந்ததாகவும் தெரிகிறது....
முங்கரின் பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம் அதன் அரிய வகையைச் சேர்ந்த பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு நாடு முழுவதிலும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இச்சரணாலயம் முங்கருக்கு தென்மேற்குத் திசையில் கராக்பூர் மலைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த...
பீர்பஹார் மலை, முங்கரிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இம்மலையுச்சியின் மீதிருந்து பார்த்தால் நகரின் அழகிய காட்சியை காணலாம்.
ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளுடன் தொடர்புடைய இம்மலை ஒரு முகமதிய துறவியின் நினைவாக இவ்வாறு...
1177 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள பீர் ஷா நஃபா வழிபாட்டு மையம், முங்கர் கோட்டையின் தெற்குப்புற நுழைவுவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த கல்லறை, பெர்ஷியாவிலிருந்து வந்து, பின்னர் அஜ்மரின் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியினால் முங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சூஃபி...
கராக்பூர் பகுதியில் அமைந்துள்ள உச்சேஷ்வர்நாத் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாகும். மிக விசேஷமானவையாகக் கொண்டாடப்படும் சிவபெருமானின் வழிபாட்டு ஸ்தலங்களுள் இக்கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது.
இங்கு வசித்து வரும் சாந்தல் மலை ஜாதி இனத்தைச்...
கோயங்கா ஷிவாலயா சிவன் கோயில்களுள் மிகவும் பிரபல்யமான ஒரு பெயராகும். இந்துக்களின் யாத்ரீக ஸ்தலங்களைப் பொறுத்தவரை இக்கோயில் மிகப் பழமையான மற்றும் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இக்கோயில் தளும்பி வழியும் நீரில் துள்ளி விளையாடும்...