முங்கரின் பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம் அதன் அரிய வகையைச் சேர்ந்த பல்வேறு வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு நாடு முழுவதிலும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
இச்சரணாலயம் முங்கருக்கு தென்மேற்குத் திசையில் கராக்பூர் மலைகளின் மேல் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் புலி, காட்டுக் கரடி, சிறு கொம்புடைய மானினமாகிய நீல்காய், காட்டுக் கோழி, கழுதைப் புலி, மலைப்பாம்பு, குரைக்கும் மான் போன்ற பல்வேறு விலங்கினங்களின் வசிப்பிடமாகத் திகழ்கிறது.
தாவர வகைகள் என்று பார்த்தால் இந்த சரணாலயத்தில் இரு வகை தாவர இனங்களைக் காண முடிகிறது. இவற்றுள் ஒன்று புல்வெளி வகையாகவும் மற்றொன்று காட்டு வகையாகவும் இனம் காணப்படுகின்றன.
பறவைகளின் புலம் பெயர் பருவத்தில், இந்த இடம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இக்காலத்தின் போது மத்திய ஆசியா பகுதியிலிருந்து எண்ணிலடங்கா பறவைகள் இங்கு புலம் பெயர்ந்து வரும். இத்தகைய பெருமை வாய்ந்த பீம்பந்த் வனவிலங்குகள் சரணாலயம் தவறாமல் சென்று பார்த்து வர வேண்டிய இடமாகும்.



Click it and Unblock the Notifications