எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்’ இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது.
இந்த எக்கோ பாயிண்ட் ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற் போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக தரிசனம் அளிக்கின்றன.
ஏரிக்கரையில் அமைதியாக இயற்கை அழகை ரசித்தபடியே நடைப்பயணம் செல்வதும் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும். மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் சுற்றிலுமுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வாசனைப்பயிர் தோட்டங்களை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.
பசுமையான புல்வெளிப்பிரதேசங்கள் மற்றும் வெளிப்பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ள இந்த எக்கோ பாயிண்ட் சாகச சுற்றுலாப்பிரியர்கள் மிகவும் விரும்பும் இடமாக உள்ளது.
புகைப்பட ஆர்வலர்கள் விரும்பும் பல அருமையான எழிற்காட்சிகள் இங்கு நிரம்பியுள்ளதால் அவர்களுக்கு இது ஒரு சொர்க்கபூமியாக தோற்றமளிக்கும் என்பதில் ஐயமில்லை.