அனுமாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலில் 72அடி உயர அனுமார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதர்ஷன் சிங் சக்ரா மற்றும் இந்தர் குமார் என்ற இரண்டு பக்தர்களால் கட்டப்பட்டது.
சிலைக்கு முன்பு இருக்கும் இடத்தில் பக்தர்களும், பயணிகளும் நிரம்பியிருப்பார்கள். கோவிலின் பின்புறம் ராமர், ராதை கிருஷ்ணர் ஆகிய கடவுள்களுக்கும் சிலை இருக்கிறது. சுதர்ஷன சிங் சக்ராவுக்காக கட்டப்பட்ட குடில் ஒன்றும் பின்புறம் இருக்கிறது.