கோயில்கள் நிரம்பியுள்ள நாகூரில் தரிசிக்க வேண்டிய மற்றொரு திருக்கோயில் இந்த பெருமாள் கோயிலாகும். பிரசித்தமான இந்த கோயிலில் வீற்றிருக்கும் தெய்வம் ஆன்மிக சக்தியுடையதாக வணங்கப்படுகிறது.
தென்னிந்திய கோயிற்கலை மரபுப்படி கட்டப்பட்டிருக்கும் இந்தக்கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையுடையதாக கருதப்படுகிறது. அபிஷேகம் மற்றும் பூஜைச்சடங்குகள் போன்ற நிகழ்ச்சிகள் இந்த கோயிலில் மிக விரிவாக நாள் தவறாமல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இக்கோயிலின் தெய்வத்தை தரிசிப்பதற்கு மாநிலங்கள் கடந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விஷ்ணுவும் அவதாரங்களின் ஒன்றான தெய்வம் வீற்றிருக்கும் இக்கோயில் 108 திவ்விய தேசங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரம்மாண்டமான கூடம் மற்றும் தரையடித்தளம் ஆகியவை இக்கோயிலில் அமைந்துள்ளன. மிக அழகாக செதுக்கப்பட்ட மரச்சிலைகளால் இங்குள்ள கூடம் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். இந்த கோயிலின் முக்கியமான திருவிழா மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications