ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள முதன்மையான சுற்றுலா தலம் தான் ஜகந்நாதர் கோவிலாகும். நீல மாதவர் கடவுளை முதன்மையானவராக கொண்டிருக்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை ராஜா புத் பிரகாஷ் என்பவர் 1681-ஆம் ஆண்டு கட்டினார்.
இங்கு வழங்கப்பட்டு வரும் புராணக்கதைகளில், இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுளானவர், மன்னர் புத் பிராகாஷின் கனவில் வந்து பீப்பால் மரத்தினடியில் இருக்கும் தன்னை முறையான இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த கோவிலை பூரி ஜெகந்நாதர் கோவிலை ஒத்த அமைப்புடையதாக மன்னர் கட்டியுள்ளார்.
மழைக்காலத்தின் இறுதியில், 52 கடவுள்களின் உருவச்சிலைகளை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு பகவான் ஜெகந்நாதரின் கோவிலுக்கு ஊர்வலமாக செல்லும் பவான் துவாதசி என்ற பண்டிகை நஹன் நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்த பண்டிகையின் சம்பிரதாயப்படி தண்ணீரில் மிதக்க விடப்படும் இந்த சிலைகள் நள்ளிரவில் அவற்றின் இடங்களில் மீண்டும் வைக்கப்படும்.



Click it and Unblock the Notifications