கோரா கடோரா ராஜ்கீருக்கு அருகில் அமைந்துள்ள அமைதி மற்றும் அழகு தவழும் ஒரு சிறிய ஏரியாகும். இந்து புராணங்களின் படி, இந்தியப் பெருங்காப்பியமான மஹாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரமான ஜரஸந்தா மன்னரின் குதிரை லாயம் இங்கு இருந்ததனாலேயே இவ்விடத்திற்கு கோரா கடோரா என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலக அமைதி கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஏரி, சுற்றிலும் சிறிய மலைகளால் சூழப்பட்டு இயற்கை அழகு ததும்ப காட்சியளிப்பதால் இது உல்லாசப் பயணத்துக்கு மிக உகந்த ஒரு இடமாகும்.
குதிரை வண்டிகள் அல்லது டோங்காக்கள் மற்றும் மிதிவண்டிகள் இவ்விடத்தை அடைவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகின்றன. இங்கு வருவோர் படகு சவாரி செய்து குதூகலமாக பொழுதைக் கழிக்கலாம்.
பிற்பகல் 2 மணியளவில் இந்த ஏரி மூடப்பட்டு விடுவதால், இங்கு செல்வதற்கு காலை நேரத்தை தேர்வு செய்வது நலம். இனிமையாக பொழுதுபோக்கக்கூடிய இடமான இங்கு காற்று மற்றும் நீரின் இடைவிடாத ஒலியைக் கேட்டு மகிழலாம்.