தோசி ஹில் எனப்படும் அணைந்த எரிமலை புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. பயணிகள் இன்னமும் இங்கு எறி கற்குழம்பைக் காணலாம். அதுமட்டுமல்லாது இங்கிருக்கும் வேத காலத்து ஆசிரமமான சவ்யான் ரிஷி ஆசிரமமும் புகழ்பெற்று விளங்குகிறது.
இம்மலையில் அடிவாரத்தில் உள்ள சாமுண்டா தேவி கோவிலின் இடத்தின் முகாலயர்கள் காலத்தின் ஒரு மசூதி கட்டப்பட்டது. பின் சுதந்திரத்திற்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட இக்கோவிலுக்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
புனித நூலான மகாபாரதம் இம்மலையை மூன்று சிகரங்கள் கொண்ட மலை, மூன்று வற்றாத நீர்வீழ்ச்சி கொண்ட மலை என்றும் குறிப்பிடுகிறது.



Click it and Unblock the Notifications