கட்டிடக் கலை விரும்பிகளுக்கு நாசிக்கில் உள்ள இந்த பாண்டவலேணி குகைகள் நிச்சயம் சுவாரசியமான ஒன்றாகும். திரிவாஷ்மி மலையின் அடிப்பாகத்தின் காணப்படும் இந்த குகைகள் 20 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
ஜைன மன்னர்களால் உருவாக்கப் பட்ட மொத்தம் 24 குகைகள் இங்கு காணப்படுகின்றன. ஜைன முனிவர்களான அம்பிகாதேவி, வீர மணிபத்ராஜி மற்றும் தீர்த்தங்கரர் விருஷாப்தி போன்றோர் இங்கு வாழ்ந்ததாக நம்பப் படுகிறது.
இந்தக் குகைகளுள் ஜைன கல்வெட்டுகளும் கலைப்படைப்புகளும் சிற்பங்களும் காணக்கிடைக்கின்றன. பெரிய பாறைகளை குடைந்து உருவாக்கப் பட்டிருக்கும் நீர்த்தொட்டிகளை இங்கு கண்டு மகிழலாம்.
ஜைன மத குருக்களும் ஆச்சாரியர்களும் தம் சீடர்களையும் பக்தர்களையும் சந்திக்கும் புனித மடாலயமாக இது வரலாற்றில் திகழ்ந்திருக்கிறது.