பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஒட்டப்பாலம் பாரதப்புழா நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இந்த நகரம் பாலக்காடு மாவட்டத்தின் மற்ற நகரங்களை போன்று அல்லாமல் தனித்துவமான கலாச்சாரத்தையும், நெடும் கதைகள் பேசும் பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது.
ஒட்டப்பாலம் நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிள்ளிக்குரிசிமங்கலம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. கேரளாவின் கலை வரலாற்றில் 'ஓட்டந்துள்ளல்' எனும் மாறுபட்ட நடன வடிவத்தை கண்டுபிடித்ததற்காக அழியாத இடம் பிடித்த குஞ்சன் நம்பியார் பிறந்த இடம் லக்கிடி அருகில் உள்ள இந்த கிள்ளிக்குரிசிமங்கலம் ஆகும்.
ஒட்டப்பாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக செருதுருத்தி அருகில் உள்ள கலாமண்டலத்துக்கு சென்று வர வேண்டும். கேரளாவின் பாரம்பரிய கலை வடிவங்களான கதக்களி, பரதநாட்டியம், கூடியாட்டம், மோகினியாட்டம் போன்ற நடனங்களை பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் கலாமண்டலம் 1927-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
மேலும் ஒட்டப்பாலம் வருவபவர்கள் சின்னகதூர் காவு (சின்னகதூர் பூரம்) கோயிலுக்கும், வள்ளுவனாதன் கோயில் என்று பிரபலமாக அறியப்படும் பரியனம்பட்டா கோயிலுக்கும் நேரமிருந்தால் சென்று வரலாம்.