சௌரப் கலியா என்ற வீரம் பொருந்திய இந்திய ராணுவ தளபதியின் நினைவாக இந்த இயற்கைப்பூங்கா வளாகம் ‘சௌரப் வன் விஹார்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. பாலம்பூர் பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சமான இது கம்பீரமான தௌலாதார் மலைத்தொடர்களுக்கு நடுவில் 35 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்த இயற்கைப்பூங்காவில் 151 வகையான தாவர மற்றும் உயிரின வகைகள் இடம் பெற்றுள்ளன. பல அரியவகை மூலிகைச்செடிகளும் இவற்றில் அடங்கும். இங்குள்ள குழந்தைகள் பூங்கா, பிக்னிக் கூடாரங்கள், ஆரோக்கிய நடைபாதைகள், நீரோடைகள், திறந்த வெளி அரங்கம், மூங்கில் பூங்கா மற்றும் டைகர் ஹில் பிரிட்ஜ் போன்ற அம்சங்களை பயணிகள் சுற்றிப்பார்த்து மகிழலாம்.