பழனியில் முக்கியமாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று பழனி தண்டாயுதபாணி ஆலயம் ஆகும். முருகப் பெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த ஆலயம் பழனி மலையின் உச்சியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது. பழனி மலையில் அமைக்கப்பட்டிருக்கும் 600 படிகளில் ஏறி இந்த ஆலயத்தை அடையலாம். அல்லது தற்போது ரோப் காரும் இந்த ஆலயத்திற்கு இயக்கப்படுகின்றது.
இந்த ஆலயத்திலிருந்து பழனி நகர் முழுவதையும் தெளிவாகப் பார்க்கலாம். தண்டாயுதபாணி ஆலயம் சேர மன்னன் சேரமான் பெருமாலால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் 8 மற்றும் 13வது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து பெரிதாகக் கட்டியிருக்கின்றனர். தங்களின் கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த ஆலயத்தின் கோபுரங்களையும் மண்டபங்களையும் அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.
பிற்காலத்தில் நாயக்க மன்னர்களும் தங்களால் இயன்ற நன்கொடைகளை இந்த ஆலயத்திற்கு வழங்கி இருக்கின்றனர். இந்த ஆலயத்தில் முருகப் பெருமான் குமரன் என்று அழைக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகிறார்.