கேரளாவின் புகழ்பெற்ற கவிஞராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் சுதந்திர போராட்ட காலத்தில் அறியப்பட்ட முளூர் எஸ்.பத்மநாப பணிக்கர் அவர்களுக்காக இந்த முளூர் ஸ்மரகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபம் பத்தனம்திட்டா நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய கிராமமான இலவம்திட்டாவில் அமைந்திருக்கிறது.
முளூர் எஸ்.பத்மநாப பணிக்கர் அவர்கள் வாழ்ந்த வீடுதான் தற்போது முளூர் ஸ்மரகம் என்ற நினைவு மண்டபமாக இந்திய கலாச்சாரத் துறையால் மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் வரலாற்று ஆர்வலர்களை தவிர, இதன் அழகிய சுற்றுச்சூழலின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளையும் இந்த நினைவு மண்டபம் ஈர்த்து வருகிறது.