அமைதியான இடமான சஞ்சய் காந்தி ஜெய்விக் உத்யான் வளாகம், நடுப்புறத்தில் ஒரு குளத்துடன் எங்கெங்கும் பசுமை சூழ காட்சியளிக்கிறது. இங்கு காணப்படும் ஏராளமான காட்டு வழித்தடங்கள் கொண்ட இந்த இடம் முக்கியமாக குழந்தைகளுக்கு மிக்க சுவாரஸ்யத்தை அளிக்கும் இடமாக விளங்குகிறது.
இந்த பூங்கா 300 வகைகளுக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் செடி கொடிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இங்குள்ள அரிய வகை செடிகளின் காட்சியகமானது, மருத்துவ செடிகள் வளர்க்கும் ஒரு பண்ணை, ஒரு ஆர்க்கிட் இல்லம், ஒரு ஃபெர்ன் இல்லம், ஒரு கண்ணாடி இல்லம் மற்றும் ஒரு ரோஜாத் தோட்டம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.