மலை மீது அமைந்திருக்கும் சங்காசோய்லிங் மடாலயததிற்கு அடர்ந்த கானகத்தில் 4 கிமீ நடை பயணம் செய்து அடைய முடியும். இந்த மடாலயம் 17-ம் நூற்றாண்டில் லாட்சன் கெம்போ லாமாவினால் கட்டப்பட்டது.
இந்த மடாலயம் இரகசிய உச்சாடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டிருக்கிறது. பல முறை தீப்பிடித்து எரிந்தாலும், ஒவ்வொரு முறையும் இந்த மடாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்தப்படும் பிரார்த்தனைகள் மட்டுமல்லாமல், திபெத்திய நாட்காட்டியில் வரும் ஒவ்வொரு மாதத்தின் 10-வது நாளும் சிறப்பு பிரார்த்தனைகளையும் லாமாக்கள் செய்து வருகின்றனர். சங்காசோய்லிங் மடாலயத்திற்குள் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications