பிரதாப்கர் மாநிலத்தின் தலைமையகமாக விளங்குவது பேல பிரதாப்கர். சாய் ஆற்றங்கரையில் பேல பவானி அம்மனின் கோவில் அமைந்திருப்பதால், இந்நகரத்திற்கு பேல பிரதாப்கர் என பெயர் வந்தது.
மாலைநேரத்தில் சாய் ஆற்றைக் கடப்பதற்கு முன்பு, இராமபெருமான், இங்கு நின்று தேவியை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இராமர் வழிபட்ட இத்தலத்தில், வெகு காலத்திற்கு பிறகு தான் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
பேல பவானி அம்மன் கோவில், பேல பிரதாப்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில், சுல்தான்பூர் ரோட்டில் அமைந்திருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து ரிக்ஷா மூலமாக கோவிலை அடையலாம்.
வருடம் முழுவதும் பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், நவராத்திரி காலங்களில் பெரும்திரளான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.