பூரியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரியில் உள்ள அலர்நாத் கோயில் கிருஷ்ண பகவானின் பக்தர்கள் வழிபடும் மிகப் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாகும்.
சத்திய யுகத்தின் போது, பிரம்மா ஒரு மலையுச்சியில் விஷ்ணு பகவானை வழிபட்டதாகவும், அதனை மெச்சிய விஷ்ணு பகவான், நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை தாங்கியவாறு தோற்றமளிக்கும் விஷ்ணு சிலை ஒன்றை, ஒரே கருங்கல்லில் இருந்து உருவாக்கும்படி பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.
அலர்நாத் கோயிலில் விஷ்ணு பகவான அலர்நாத் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகிறார். விஷ்ணு பகவானின் வாகனமாகிய கருடனின் சிலை, விஷ்ணு சிலையின் காலடியில், முழங்காலிட்டு கைகளை கூப்பிய வண்ணம் இருப்பதையும் காணலாம்.
கிருஷ்ண பகவானின் துணைவியரான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோரின் சிலைகளையும், சைதன்யரின் சிலையையும் கோயிலினுள்ளே காண முடிகிறது. சைதன்யரின் உடல் அழுத்தியதால் ஏற்பட்ட சுவடுகளைக் கொண்டிருக்கும் ஒரு கல்லும் இக்கோயிலில் காணப்படுகிறது.
சைதன்யருக்கு அடியில் இருந்த கல்லானது, அவர் முதன் முதலில் அலர்நாத்துக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய போது கரைந்து போனதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications