துர்க்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பலிஹார் சண்டி கோயில், பிரம்மகிரி மற்றும் சதபடாவை நோக்கிப் பயணிக்கையில், பூரிக்கு தென்மேற்குப்புறத்தில் சுமார் 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த அழகிய கோயில், கடலுக்கு வெகு அருகில் ஒரு மணற்பாறையின் மேல் காணப்படுகிறது. துர்கா தேவியை பக்தர்கள் பலிஹார் தேவி என்ற பெயரில் இங்கு வழிபட்டு வருவதால் இக்கோயில் இப்பெயரைக் கொண்டு விளங்குகிறது.
அஷ்வினாவில் வரும் மகாநவமி நாளில் கொண்டாடப்படும் சடங்கினால், பூரியில் உள்ள ஏனைய கோயில்களைப் போன்றே இக்கோயிலும், ஜகன்னாதர் கோயிலுடன் தொடர்பு கொண்டுள்ளது.
ஒரு மண்டையோட்டையும், ஒரு வெட்டப்பட்ட தலையையும் தன் இடக்கையில் பிடித்துள்ளவாறு அலிதா பாவத்துடன் நின்ற நிலையில், சிவபெருமானின் உடலில் உள்ளவாறு காட்சியளிக்கும் காளி தேவியின் ஓவியம் ஒன்று, கோயிலின் பின்புறத்தில் உள்ள ராஹபாகாவின் அடிவாரத்தில் காணப்படுகிறது.
பார்கவி நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு யாத்ரீக ஸ்தலமாக மட்டுமின்றி இயற்கை அழகு மிகுந்த ஒரு இடமாகவும் காட்சியளிக்கிறது. பார்கவி நதி கடலோடு சேரும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.