தரமான பட்டு வாங்க விரும்புபவர்கள் வரவேண்டிய இடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரத்தின் பட்டுச் சந்தையே ஆகும். ராமநகரத்தில் நெய்யப்படும் பட்டு சிறந்த தரத்துடன் விளங்குவதாலும், அதிக அளவில் பட்டு உற்பத்தி செய்யப்படுவதாலும் இதற்கு பட்டு நகரம் என்று பெயர் வந்தது.
உலகப் பிரசித்தி பெற்ற மைசூர் பட்டுப் புடவை ராமநகரத்திலிருந்து பெறப்படும் பட்டிலிருந்தே செய்யப்படுகிறது. ராமநகரத்தின் மக்கள் பெரும்பாலும் பட்டு உற்பத்தி செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். இதனால் ஆசியாவிலேயே பட்டு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் நகரமாக ராமநகரம் விளங்குகிறது.