உபட் எனும் இந்த அழகிய நகரம் ராணிக்கேத் பகுதியில் பிரசித்தமான சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. இது ராணிக்கேத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பனிமூடிய இமயமலைச்சிகரங்களை இங்கிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
தவிர இங்கு 9 குழிகளைக்கொண்ட பெரிய கோல்ஃப் மைதானமும் அமைந்துள்ளது. இந்தியாவில் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் கோல்ஃப் மைதானம் இதுவே. சுற்றிலும் பைன் மற்றும் ஓக் மரக்காடுகளால் சூழப்பட்டிருக்கும் உபட் ஸ்தலம் அல்மோராவுக்கு செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது.
காளிகா எனும் மற்றொரு முக்கியமான நகரமும் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரு பிரசித்தமான காளி கோயில் உள்ளது. இது தவிர இங்குள்ள ஒரு பெரிய பூந்தோட்டப்பண்ணைக்கும் இந்த இடம் பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications