ஜூலா தேவி கோயில் அல்லது ஜுலா தேவி கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் ராணிக்கேத் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. துர்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயம் 8ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்து புராணிகக்கதைகளின்படி இந்த கோயிலானது இந்த கோயிலானது இப்பகுதி மக்களை காட்டு மிருகங்கள் அண்டாது பாதுகாக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஒரு இடையனின் கனவில் துர்க்கை தோன்றி தனது சிலையை தோண்டி எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் இந்த கதை சொல்கிறது. அந்த சிலை அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்திலேயே இந்த கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.
அலங்காரமாக வடிக்கப்பட்ட ஆலய மணிகளை ஏராளம் கொண்டிருக்கும் இக்கோயிலை தூரத்திலிருந்து நெருங்கும்போதே மணிகளின் ஓசையை யாத்ரீகர்கள் கேட்கலாம்.
இக்கோயில் வணங்கும் அனைத்து பக்தர்களின் விருப்பங்களையும் தவறாது ஜூலா தேவி நிறைவேற்றி வைப்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. அருகிலேயே அமைந்திருக்கும் ராமர் கோயிலுக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம்.